தாரம் கூட தாயப்போல! ஈடு சொல்ல யாருமில்ல!
என்ன எவ்ளோ பிடிக்கும்னு கேக்குறா!
வரையறுக்க முயலக்கூடப் போவதில்லை,
தோற்றுத்தான் போவேன்!
கட்டுக்குள் அடங்க அது நானில்லை!
ஒரு பார்வையில் கட்டிப்போட
உன்னால் மட்டுமே முடியும்..
விழி வழியாக ஊடுறுவும் வித்தையை எங்கு கற்றாயடி நீ?
நொடியில் நூறு தகவல் பரிமாற்றம்!
படித்ததும் அது தானே! (ECE)
ஒரே பார்வையில்
மகிழ்ச்சி
மயக்கம்
காதல்
மோகம்
தவிப்பு
கோபமென
எப்படி முடிகிறது உன்னால் மட்டும்!
இன்னும் என்னென்ன வித்தைகளோ!
ஒவ்வொரு வினாடியும்
அர்த்தமானதாய்
முழுமையாய்
உன்னால்
நம் வாழ்க்கை!
'எவ்ளோ பிடிக்கும்'னு கேட்டா என்ன சொல்றது நானு?
வடிவேல் சொல்றா மாதிரி
"சின்னப்புள்ளத்தனமால்ல இருக்கு"